தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் அனைத்து கட்சிகளும் தீவிரவாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் கோயம்புத்தூரில் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இன்று தனது பிரசாரத்தில் ஈடுபட்டார்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவரிடம், மோடி என்ன கியாரண்டி கொடுப்பார் என ஸ்டாலின் கேட்பதாக கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த அண்ணாமலை, தமிழ்நாட்டில் இருக்கும் மக்கள் அனைவரும் திராவிட முன்னேற்றக் கழகம் என்ற தீய சக்தி இடம் இருந்து காப்பாற்றப்படுவார்கள் என கியாரண்டி கொடுப்பார் என பதில் அளித்துள்ளார்.