கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள செம்பட்டி காலணியில் நகை பட்டறை அதிபரான வெங்கடேஷ் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2016-ஆம் ஆண்டு தனியார் நிதி நிறுவன மேலாளரான சத்தியநாதன் என்பவர் பல்வேறு தவணையாக வெங்கடேசிடமிருந்து 16 லட்சம் ரூபாய் பணத்தை கடனாக வாங்கினார்.

அதில் 6 லட்ச ரூபாய் காசோலையும், ஒரு லட்ச ரூபாய் பணத்தை வெங்கடேசன் வங்கி கணக்கிலும் சத்யநாதன் செலுத்தி விட்டார். மீதமுள்ள 9 லட்சம் ரூபாய் பணத்தை கொடுக்காமல் காலம் தாழ்த்தியுள்ளார். இதுகுறித்து வெங்கடேஷ் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.