ராஜஸ்தானைச் சேர்ந்தவர் பவர்லால். மனைவி மீனா. இவர்கள் சேலம் செவ்வாய்பேட்டையில் வசித்து வருகின்றனர். பவர்லால் சேலத்தில் தனியார் நிறுவனத்தில் மேலாளராக வேலை பார்த்து வருகிறார். இவர்களது 2 வயது பெண் குழந்தை மெகக். குழந்தையை அவரது தாயார் நேற்று மதியம் தூரி தொட்டிலில் படுக்க வைத்து விட்டு மற்றொரு குழந்தையை குளியல் அறைக்கு அழைத்து சென்றார். அப்போது தொட்டிலில் இருந்து இறங்க முயன்ற குழந்தையின் கழுத்தில் பெல்ட் மாட்டிக்கொண்டது.

இதில் மயங்கிய குழந்தையை சேலத்தில் தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அப்போது குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து செவ்வாய்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர்.