இந்தியாவில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் இலட்சக்கணக்கானோர் பணியாற்றி வருகிறார்கள். ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள குளங்களை தூர் வாரும் பணி, கால்வாய்களை பராமரிப்பது மற்றும் காடுகளை பராமரிப்பது உள்ளிட்ட அரசு சார்ந்த பணிகளுக்கு இந்த பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.

இந்த நூறு நாள் வேலைத்திட்டத்தின் கீழ் பணியாற்றும் ஊழியர்களுக்கு 281 ரூபாய் ஒரு நாள் சம்பளமாக வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் 100 நாள் வேலை திட்ட பணியாளர்களுக்கு சம்பளத்தை உயர்த்தி வழங்க மத்திய அரசு திட்டமிட்டு உள்ள நிலையில் ஊழியர்களுக்கு ஒரு நாள் சம்பளமாக 181 ரூபாயிலிருந்து 194 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த ஊதிய உயர்வை ஏப்ரல் 2ம் தேதியில் இருந்து அமலுக்கு வரும் எனவும் மத்திய அரசு அறிவித்துள்ளது.