இந்தியாவில் கொரோனா பாதிப்பு பல மாநிலங்களிலும் தற்போது மீண்டும் அதிகரித்து வருகிறது. இதனால் அனைத்து மாநில அரசுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இந்த நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் நோயாளிகளை அனுமதிக்க மருத்துவமனைகளுக்கு புதிய வழிகாட்டுதல்களை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

அதன்படி நினைவு இழந்த அல்லது செயற்கை சுவாசம் தேவைப்படும் நோயாளிகளுக்கும் அறுவை சிகிச்சைக்கு பிறகு உடல்நிலை மோசம் அடையலாம் அல்லது கடுமையாக பாதிக்கப்பட்ட தீவிர கண்காணிப்பு தேவைப்படுவோருக்கும் பரிந்துரைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.