தேர்தலுக்கு முந்தைய நாள் ஏப்ரல் 18ஆம் தேதி அரசு பேருந்துகளில் பயணிக்க இதுவரை 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் முன்பதிவு செய்துள்ளனர். ஏப்ரல் 19ஆம் தேதி வெள்ளிக்கிழமை வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் ஏப்ரல் 17 முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. மூன்று நாட்கள் தொடர் விடுமுறை கிடைப்பதால் சொந்த ஊர் செல்ல மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர். கடைசி நேரம் நெரிசலை தவிர்க்க www.tnstc.in என்ற இணையதளத்தில் தற்போதைய முன்பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.