நெல்லை மாவட்ட அதிமுக வர்த்தக அணி செயலாளர் செல்வகுமார் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். அதிமுகவில் உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை; கட்சி நிர்வாகிகளும் மரியாதை கொடுப்பதில்லை என அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்து கட்சியில் இருந்து விலகுவதாக இபிஎஸ்-க்கு கடிதம் எழுதியுள்ளார். நயினார் நாகேந்திரனுக்கு நெருக்கமானவர் என கூறப்படுவதால், அவர் பாஜகவில் இணைய வாய்ப்புள்ளது.