தமிழகத்தில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நெருங்கும் நேரத்தில் அரசியல் கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன.. இந்த நிலையில் தேனியில் டிடிவி தினகரனை ஆதரித்து அண்ணாமலை வாக்கு சேகரித்தார். அப்போது தமிழகத்தில் மாற்றம் வர வேண்டும் என்பதற்காக தினகரனே தேர்தல் களத்தில் இறங்கியுள்ளார். திமுக குடும்பத்திடமிருந்து தமிழகத்தை காக்க வேண்டும் என்றால் தேனியில் அவரை வெற்றி பெற செய்ய வேண்டும் என்று கூறிய அண்ணாமலை, திமுகவினர் தரும் பணம் கஞ்சா விற்ற பணம், அதை வேண்டாம் என்று சொல்லுங்கள். அதை வாங்கினால் மிகப்பெரிய பாவம் என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.