தமிழகத்தில் நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நெருங்கும் நிலையில் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில் ஜெயலலிதா சிறைக்குச் செல்ல முக்கிய காரணம் செல்வ கணபதி தான் என இபிஎஸ் குற்றம் சாட்டியுள்ளார்.

அதிமுக தொண்டர்களின் உழைப்பால் அடையாளம் காணப்பட்ட செல்வ கணபதி தற்போது வேட்டியை மாத்தி கட்டி விட்டு திமுக வேட்பாளராக உள்ளதாக சாடினார். ஜெயலலிதாவுக்கு துரோகம் செய்ததால் அவர் கட்சியை விட்டு வெளியேற்றப்பட்டதாகவும் கூறியுள்ளார். முன்னதாக நம்பிக்கை துரோகத்திற்கு சிறந்த உதாரணம் இபிஎஸ் என செல்வ கணபதி குற்றம் சாட்டி இருந்த நிலையில் இபிஎஸ் தற்போது பதிலடி கொடுத்துள்ளார்.