சென்னை மாவட்டத்தில் உள்ள மாதவரம் பேருந்து நிலையத்தில் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் மற்றும் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகப்படும்படியாக ஒரு இளம்பெண்ணுடன் சுற்றி திரிந்த வாலிபரை போலீசார் பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர்கள் தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த 18 வயது கல்லூரி மாணவர் என்பதும், அந்த பெண் 11-ஆம் வகுப்பு படிக்கும் 16 வயது சிறுமி என்பதும் தெரியவந்தது.

கல்லூரி மாணவர் காதலித்து ஆசை வார்த்தைகள் கூறி தெலுங்கானாவில் இருந்து சிறுமியை சென்னைக்கு கடத்தி வந்தது விசாரணையில் தெரியவந்தது. இதனால் கல்லூரி மாணவரை போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து தெலுங்கானா மாநில போலீசார் உதவியுடன் சிறுமியின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து சிறுமியின் பெற்றோரை மாதவரம் வரவழைத்து சிறுமியை பத்திரமாக ஒப்படைத்தனர்.