சென்னை மாவட்டத்தில் உள்ள திருமங்கலம் பகுதியை சேர்ந்த ஒரு இனம் பெண் தனியாக அறை எடுத்து தங்கி உள்ளார். இவர் ஐடி நிறுவனத்தில் வேலை பார்த்துக்கொண்டே அரசு வேலைக்காக படித்து வருகிறார். நேற்று இரவு இளம்பெண் அசதியில் தனது அறையின் கதவை திறந்து போட்டு தூங்கினார். மறுநாள் காலை எழுந்து பார்த்தபோது தனக்கு அருகே ஒரு ஆண் நிர்வாண நிலையில் படுத்திருப்பதை கண்டு கூச்சலிட்டார். உடனே அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து அந்த நபரை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

இதனையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் அவர் ஈரோடு மாவட்டம் குப்பச்சி பாளையத்தைச் சேர்ந்த பொன்னுசாமி என்பது தெரியவந்தது. அந்த இளம்பெண் தங்கியிருக்கும் அது குடியிருப்பில் தான் பொன்னுசாமியின் உறவினர் தங்கி இருக்கிறார். அவரை பார்ப்பதற்காக வந்த பொன்னுச்சாமி குடிபோதையில் உறவினர் அறைக்கு செல்வதற்கு பதிலாக இளம் பெண்ணின் அறைக்குள் சென்று நிர்வாணமாக தூங்கியது தெரியவந்தது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் பொன்னுசாமியை கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.