தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு கிராம நிர்வாக அதிகாரி லூர்துபிரான்சிஸ் என்பவரை இரண்டு மர்ம நபர்கள் கிராம நிர்வாக அலுவலம் புகுந்து வெட்டி கொலை செய்துள்ளனர். இது தொடர்பாக காவல்துறையினர் நடத்திய விசாரணையில், பிரான்சிஸ் சில நாட்களுக்கு முன்னர் அப்பகுதி மணல் கடத்தல் குறித்து புகாரளித்ததால் கொலை செய்தது தெரியவந்தது.

இந்த செயலுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில் டிடிவி தினகரன், ‘தூத்துக்குடியில் VAO வெட்டிக்கொலை செய்யப்பட்டது அதிர்ச்சியளிக்கிறது. கனிம வளக் கொள்ளையை திமுக தட்டி கேட்காமல் வேடிக்கை பார்த்ததால் ஏற்பட்ட விளைவுதான் இது’ என  கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார். மேலும், ‘இதற்கு நிவாரணம் தீர்வு என்றால், இந்த கொலையை செய்த சமூக விரோதிகள் மீதான நடவடிக்கை என்ன? இந்த சமூக விரோதிகளை பார்த்து அரசு அஞ்சி நடுங்குகிறதா?’ என கேள்வி எழுப்பியுள்ளார்.