தமிழ்நாடு முழுவதும் அங்கன்வாடி ஊழியர்கள் தற்போது போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பதவி உயர்வு, காலி பணியிடங்களை நிரப்புதல் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, வேலூர், திருவாரூர், அரியலூர், சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது. இதில், தரமணியில் உள்ள ICDS அலுவலக வாயிலில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட அங்கன்வாடி ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.