மதுரையில் டைடல் பார்க் அமைக்கப்படும் என கடந்த வருடம் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டார். அதன்பின் மதுரை மாநகராட்சி அதிகாரிகளால் இடம் தேர்வு செய்யும் பணிகள் முழுவீச்சில் நடந்தது. கடைசியாக மதுரையின் மைய பகுதியான மாட்டுத் தாவணியில் இந்த புது டைடல் பார்க் கட்ட முடிவுசெய்யப்பட்டது.

இதன் மூலமாக மதுரை மற்றும் அதன் சுற்றியுள்ள மாவட்டங்களை சேர்ந்த சுமார் 10,000 இளைஞர்களுக்கு புது வேலைவாய்ப்பு கிடைக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டது. அதனடிப்படையில் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு இப்போது கட்டுமான வரைபடம் உறுதிசெய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் மதுரை மாட்டு தாவணியில் அமைய இருக்கும் டைடல் பார்க் வடிவமைப்பு பணிகளை மேற்கொள்வதற்குரிய டெண்டர் வெளியிடப்பட்டு உள்ளது. அதனை தொடர்ந்து டைடல் பார்க் குறித்த பணிகள் விரைவாக நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.