தமிழக நிதி அமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜர் பேசியதாக கூறப்படும் முதல் வீடியோ வெளியாகி பரபரப்பு ஏற்படுத்திய நிலையில் அது அடங்குவதற்குள் தற்போது அண்ணாமலை இரண்டாவது வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் கட்சியையும் மக்களையும் பார்த்துக் கொள்ளும் பொறுப்பு பிரித்திருக்க வேண்டும் அல்லவா? ஆனால் இங்கு எல்லா முடிவுகளையும் எம்எல்ஏக்களும் அமைச்சர்களும் தான் எடுக்கின்றனர். முதல்வரின் மகனும் மருமகனும் தான் கட்சியே என பி டி ஆர் பேசுவது போல் ஆடியோ தற்போது வெளியாகி பரபரப்பை கிளப்பியுள்ளது.