தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து கொண்டிருக்கும் சூழலில் கோடை வெயிலை தணிக்கும் வகையில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. கடந்த சில நாட்களாக தமிழகத்தின் பல மாவட்டங்களிலும் மழை பெய்து வருகிறது. என் நிலையில் தமிழகத்தில் 20 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர், சிவகங்கை, புதுக்கோட்டை, திருவாரூர், தஞ்சாவூர், மயிலாடுதுறை, திருச்சி, நாகை, கடலூர், அரியலூர், பெரம்பலூர், விழுப்புரம்  ஆகிய மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.