தமிழகத்தில் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் கடந்த மார்ச் 13ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 3ஆம் தேதி நிறைவடைந்தது. அதற்கான தேர்வு முடிவுகள் மே ஐந்தாம் தேதி வெளியாகும் என அரசு அறிவித்திருந்தது. தற்போது மே ஏழாம் தேதி நீட் தேர்வு நடைபெற உள்ளதால் 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளை வேறு தேதிக்கு மாற்றி அமைக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

நீட் தேர்வு மாணவர்கள் கவனம் செலுத்தி வெற்றி பெற ஏதுவாக பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் தேதி மாற்றி அமைக்கப்படும் எனவும் தேர்வு முடிவுகள் வெளியிடும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.