தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு கிராம நிர்வாக அதிகாரி லூர்துபிரான்சிஸ் என்பவரை இரண்டு மர்ம நபர்கள் கிராம நிர்வாக அலுவலம் புகுந்து வெட்டி கொலை செய்துள்ளனர். இது தொடர்பாக காவல்துறையினர் நடத்திய விசாரணையில், பிரான்சிஸ் சில நாட்களுக்கு முன்னர் அப்பகுதி மணல் கடத்தல் குறித்து புகாரளித்ததால் கொலை செய்தது தெரியவந்தது.

இந்நிலையில்  VAO லூர்து பிரான்சிஸ் குடும்பத்திற்கு முதல்வர் ஸ்டாலின் ரூ.1 கோடி நிவாரணம் அறிவித்துள்ளார். மேலும், கருணை அடிப்படையில் அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி வழங்கவும் உத்தரவிட்டுள்ளார். மணல் கடத்தல் குறித்து புகார் அளித்ததால், இன்று பிற்பகலில் பணியில் இருந்தபோதே VAO அலுவலகத்திற்குள் சென்ற கும்பல் அவரை வெட்டி கொலை செய்தது குறிப்பிடத்தக்கது.