இந்தியாவில் பெண் குழந்தைகளின் எதிர்காலத்திற்காக செல்வமகள் சேமிப்பு திட்டம் சிறந்ததாக விளங்கி வருகிறது. பெற்றோர்கள் அல்லது பாதுகாவலர்கள் பத்து வயதிற்கு மேற்பட்ட குழந்தைகளின் பெயரில் செல்வ மகள் சேமிப்பு திட்ட கணக்கை தொடங்கலாம். இந்தத் திட்டத்தில் குறைந்தது 250 ரூபாய் முதல் சேமிக்க முடியும். இந்த செல்வமகள் சேமிப்பு திட்டம் மிகவும் பாதுகாப்பான திட்டமாகவும் வட்டி விகிதம் எட்டு சதவீதம் வரையும் வழங்கப்படுவதால் ஏராளமானோர் தங்களின் பெண் குழந்தைகளுக்காக செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் கணக்கு தொடங்கியுள்ளனர்.

இந்நிலையில் இதுவரை தமிழகத்தில் மட்டும் 38 லட்சத்தி 38 ஆயிரம் கணக்குகள் செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் குழந்தைகளின் பெயரில் பெற்றோர்கள் தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்தியாவிலேயே செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் அதிக அளவிலான கணக்குகள் தொடங்கப்பட்ட மாநிலங்களில் தற்போது தமிழகம் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. மேலும் பெற்றோர்கள் தங்களின் குழந்தைகளின் பெயரில் செல்வமகள் சேமிப்பு திட்டம் சேமிப்பு கணக்கு தொடங்க விரும்பினால் அருகில் உள்ள தபால் அலுவலகத்தை அணுகலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.