உலக பிரசித்தி பெற்ற சித்திரை திருவிழா கடந்த ஏப்ரல் 23ஆம் தேதி கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கி விமர்சையாக நடைபெற்ற வருகிறது. கடந்த இரண்டு நாட்களும் மீனாட்சியம்மன் வாகனத்தில் உலா சென்று பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார். இந்நிலையில் கள்ளழகர் வருகின்றமே ஐந்தாம் தேதி வைகை ஆற்றில் இறங்குகிறார். இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வரும் நிலையில் மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர், மே ஐந்தாம் தேதியை உள்ளூர் விடுமுறையாக அறிவித்துள்ளார். இதனை தொடர்ந்து மே மாதம் ஐந்தாம் தேதி விடப்பட்ட உள்ளூர் விடுமுறையை ஈடு செய்ய ஜூன் 10ஆம் தேதி வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.