கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மேலசாந்தி மங்கலம் வடக்கு தெருவில் காந்தி- செல்வி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களது மூத்த மகள் நிலா கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இளைய மகள் ஹேமா பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் நீண்ட நேரம் செல்போன் பார்ப்பதை வழக்கமாக கொண்ட நிலாவை செல்வி அடிக்கடி கண்டித்தார். நேற்று முன்தினம் இரவில் நீண்ட நேரமாக செல்போன் பார்த்துக் கொண்டிருந்த நிலாவிடம் செல்வி இன்னும் தூங்காமல் செல்போனையே பார். உனக்கு வேற வேலை இல்லையா. சொன்னதை கேட்க மாட்டாயா? என திட்டினார்.

இதனால் மன உளைச்சலில் இருந்த நிலா வீட்டிலிருந்த மண்ணெண்ணையை உடல் முழுவதும் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். இதனால் வலி தாங்காமல் அங்கும் இங்கும் அலறி துடித்தபடி ஓடிய நிலாவை குடும்பத்தினர் மீட்க முயன்றனர். அதற்குள் உடல் கருகி நிலா பரிதாபமாக உயிரிழந்தார். இதனை பார்த்து குடும்பத்தினர் கதறி அழுதனர். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று நிலாவின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.