திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு அருகே மின்சார ரயிலில் கோளாறு ஏற்பட்டு நடுவழியில் நிறுத்தப்பட்டது.

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் இருந்து சென்னை நோக்கி புறப்பட்ட மின்சார ரயில் திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு அருகே வரும்போது, ரயிலில் எஞ்சின் பகுதியில் கோளாறு ஏற்பட்டு நடுவழியில்  நிறுத்தப்பட்டது. அதன்பின் ரயிலில் ஏற்பட்டது கோளாறை சரி செய்ய ஊழியர்கள் அழைக்கப்பட்டுள்ளனர். மேலும் பயணிகள் மாற்று ரயிலில் செல்ல அறிவுறுத்தப்பட்டனர். எஞ்சின் பழுது ஏற்பட்டதை தொடர்ந்து, சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் ஆண்கள், பெண்கள் முதியவர்கள் என அனைவரும் ரயில்வே பாதையில் நடந்து சென்று திருவாலங்காடு ரயில் நிலையத்தை அடைந்துள்ளனர். இதனிடையே ரயில் போக்குவரத்தை சரி செய்ய ரயில்வே ஊழியர்கள் தற்போது ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் ரயில் பழுதான பாதை தவிர மற்ற பாதையில் ரயில் இயக்கப்பட்டு பயணிகள் செல்ல ரயில்வே துறை ஏற்பாடு செய்தது. அதன்படி பயணிகள் தற்போது புறப்பட்டு மாற்று ரயிலில் சென்று கொண்டுள்ளனர். எஞ்சினில் புகை   வந்ததாலும், பிரேக் பகுதியில் பழுது அடைந்ததாகவும், அதை சரி செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.. சரி செய்யப்பட்டவுடன் சிறிது நேரத்தில் சென்னை சென்ட்ரல் வந்தடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது..