விழுப்புரம் அன்பு ஜோதி ஆசிரமத்தில் மனநலம் பாதிக்கப்பட்டோருக்கு பாலியல் வன்கொடுமை நிகழ்ந்ததாக குற்றச்சாட்டு எழுந்ததை தொடர்ந்து, அந்த ஆசிரமத்தை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

விழுப்புரம் அன்பு ஜோதி ஆசிரமத்தில் மனநலம் பாதிக்கப்பட்டோருக்கு பாலியல் வன்கொடுமை நிகழ்ந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக இதுவரை 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் இதன் எதிரொலியாக அன்பு ஜோதி ஆசிரமத்தில் உள்ளவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தற்போது அந்த ஆசிரமத்தை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு மாநில மனநல ஆணையம் உத்தரவிட்டுள்ளதாக விழுப்புரம் ஆட்சியர் பழனி இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.