போலி பத்திரம் தொடர்பாக வழக்கு நிலுவையில் இருந்தாலும் அதனை ரத்து செய்யும் அதிகாரம் பத்திரப்பதிவாளருக்கு உண்டு என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. போலி பத்திரம் குறித்த வழக்கு உரிமையியல் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்தாலும் அதனை விசாரித்து ரத்து செய்யும் அதிகாரம் மாவட்ட பத்திர பதிவாளருக்கு உள்ளது. இது தொடர்பான வழக்கு உரிமையியல் நீதிமன்றத்தில் இருந்தால் அந்த வழக்கு முடியும் வரையில் நீதிமன்ற தீர்ப்பு வரும் வரையில் மனுதாரர் தரப்பை காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்படும். பதிவு செய்யப்பட்ட ஆவணத்தில் உண்மை தன்மை அறிய மாவட்ட பத்திரப்பதிவாளருக்கு அதிகாரம் உள்ளது என்று தமிழக அரசு விளக்கம் அளித்தது.

இதனை தொடர்ந்து போலி பத்திரம் குறித்து ஆய்வு செய்து அதனை ரத்து செய்வதற்கு நீதிமன்ற வழக்கு நிலுவையில் இருந்தாலும் பத்திர அலுவலரிடம் புகார் அளிக்கலாம் என்று சென்னை உயர்நீதிமன்ற உத்தரவிட்டுள்ளது. மோசடி ஆவணங்கள் குறித்து மாவட்ட பதிவாளர் இடம் புகார் அளிக்கும் உரிமையை பறிக்க முடியாது. ஆவணங்கள் மோசடியாக பதிவு செய்யப்பட்டதா என விசாரிக்க மாவட்ட பதிவாளருக்கு அதிகாரம் உள்ளது எனவும் உத்தரவிட்டுள்ளது.