திருவாரூர் மாவட்டம் ஆட்சியர் அலுவலகம் அருகே திடீர் வெடி சத்தம் மற்றும் நில அதிர்வு ஏற்பட்டதால் பொது மக்கள் அச்சம் என செய்திகள் வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில் இதுகுறித்து தமிழ்நாடு உண்மை சரிபார்ப்பு குழு பகிர்ந்துள்ள பதிவில் அது முற்றிலும் ஒரு வதந்தி என கூறப்பட்டுள்ளது. மேலும் அது, இந்திய விமானப்படை தஞ்சையில் இருந்து கோடியக்கரை வரை விமான ஒத்திகையை நடத்தியுள்ளது.

விமானம் புறப்படும் போது காற்று உயர் அழுத்தத்தில் விடுவிக்கப்படும் (Airlock Release). இதன் காரணமாக ஏற்பட்ட அதிர்ச்சியை நில அதிர்வு எனத் தவறாக பரப்பி வருகின்றனர். மேலும் விமானம் விபத்து என போலியான புகைப்படங்களை பரப்பி வருகின்றனர் என கூறியுள்ளது.