மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் தேனி மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் வி.டி.நாராயணசாமி அறிமுக கூட்டம் மற்றும் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அப்போது பேசிய முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், எம்.ஜி.ஆர், அம்மா என முதல்வராக இருந்த யாருக்கும் இந்த நிலை இல்லை.

இன்று வீதியில் நின்று ஒரே ஒரு சீட்டுக்காக சென்றிருக்கிறார், சின்னத்திற்காக அது வேண்டும் இது வேண்டும் என கேட்கிறார். அம்மா உயிர் பறிபோக நீங்கள்தான் காரணம். அம்மாவின் ஆன்மா, இந்த தேர்தல் முடிந்த பின் அரசியலை விட்டே போகும் நிலைக்கு உங்களை தள்ளும் என கூறியுள்ளார்.