தாம்பரம் ரயில் நிலையத்தில் ₹4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் பாஜக துணைத் தலைவர் நயினார் நாகேந்திரனின் உறவினர்கள் இருவருக்கு சிபிசிஐடி சம்மன் அனுப்பியுள்ளது. அந்த சம்மனில், அவரது உறவினர் முருகன் உள்பட இருவரும் இன்று காலை 11 மணிக்கு விசாரணைக்கு ஆஜராகும்படி குறிப்பிடப்பட்டுள்ளது. ஏற்கெனவே, இந்த வழக்கு தொடர்பாக நவீன், பெருமாள், சதீஷ் ஆகியோருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது