விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் அறிவிப்பு இந்த வாரத்தில் வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டி தொகுதி எம்எல்ஏவாக இருந்த திமுகவைச் சேர்ந்த நா.புகழேந்தி கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி உடல்நலக்குறைவால் காலமானார்.

இந்த நிலையில், அந்த தொகுதி காலியானதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதனிடையே மக்களவை தேர்தலுக்காக கடைசி கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நாளான ஜுன் 1ஆம் தேதி, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்த அறிவிப்பு இந்த வாரத்தில் வெளியாகும் என தெரிகிறது.