பிரதமர் மோடி 6 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட தடை விதிக்கக் கோரிய ரிட் மனுவை, டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. தேர்தல் பிரசாரத்தின்போது கடவுள், கோயில் குறித்து மோடி பேசியது, தேர்தல் விதிமீறல் என ஜோன்டல் என்பவர் ஏப்ரல் 15ஆம் தேதி வழக்குத் தொடர்ந்தார். இந்த மனுவை விசாரித்த டெல்லி ஐகோர்ட், ஜோன்டலின் கோரிக்கையை நிராகரித்து, அவரது மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.