புனித வெள்ளி மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு அரசு போக்குவரத்து கழகம் மூலம் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் புதிதாக திறக்கப்பட்ட சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து தென் மாவட்டங்களின் பல இடங்களுக்கு மார்ச் 28 அன்று மொத்தம் 505 பேருந்துகளும், மார்ச் 29 அன்று மொத்தம் 300 பேருந்துகளும், மார்ச் 30 அன்று மொத்தம் 345 பேருந்துகளும் இயக்கப்படும் என போக்குவரத்துக் கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது