தாய்லாந்து நாட்டின் பாங்காக்கில் இருந்து 49 பயணிகளுடன் பேருந்து ஒன்று பிரச்சாவ் கிரி மாகாணத்திற்கு சென்று கொண்டிருந்தது. அப்போது தேசிய பூங்கா அருகே பேருந்து வந்த போது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து மரம் ஒன்றில் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் 14 பேர் உயிரிழந்ததாக கூறப்படும் நிலையில் 30க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்துள்ளனர். பேருந்து ஓட்டுநர் தூங்கியது தான் விபத்துக்கான காரணம் என்றும் அவருக்கு ரத்த மாதிரி பரிசோதனை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.