நைஜீரியா நாட்டின் வடமேற்கு மற்றும் வடகிழக்கு பகுதிகளில் செயல்பட்டு வரும் ஆயுத கும்பல்களை குறி வைத்து அந்நாட்டு ராணுவம் அவ்வப்போது தாக்குதல் மேற்கொள்ளும். இந்நிலையில் வடமேற்கு பகுதியில் உள்ள மாகாணத்தில் ராணுவத்தினர் ட்ரோன் மூலமாக தாக்குதல் மேற்கொண்டனர். அப்போது பண்டிகை ஒன்றிற்காக கிராம மக்கள் ஏராளமானோர் ஒரு பகுதியில் கூடி இருந்த நிலையில் அவர்களை நோக்கி தவறுதலாக ட்ரோன் தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் ஏராளமானோர் படுகாயம் அடைந்த நிலையில் 85 பேர் உயிரிழந்ததாக கூறப்பட்டுள்ளது.