அமெரிக்காவின் வாஷிங்டன் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் துப்பாக்கியால் சுடும் சத்தம் கேட்டுள்ளது. இதனை தொடர்ந்து காவல்துறையினர் அப்பகுதிக்கு சோதனை மேற்கொள்ள சென்று குறிப்பிட்ட வீட்டிற்குள் நுழைந்து சோதனை செய்தனர். அப்போது அந்த வீட்டில் இருந்த நபர் ஒருவர் காவல்துறையினர் மீது துப்பாக்கி சூடு தாக்குதல் மேற்கொண்டுள்ளார்.

அந்த சமயத்தில் திடீரென அந்த வீட்டில் வெடிகுண்டு வெடித்துள்ளது. இதில் சோதனைக்காக சென்ற காவல்துறையினர் சிறு காயங்களுடன் உயிர் தப்பியுள்ளனர். வீட்டுக்குள் இருந்த நபர் உயிர் பிழைத்தாரா அல்லது தப்பி சென்றாரா என்பது பற்றிய தகவல் எதுவும் வெளியாகவில்லை. காவல்துறையினர் வீட்டிற்குள் வந்ததும் அந்த நபர் வெடிகுண்டை வெடிக்க வைத்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.