திருச்சி மாவட்டம் கோப்பு மேல தெரு பகுதியை சேர்ந்த அருள்ராஜ் என்பவரது மூன்று வயது மகன் மகிழ் மித்ரன். கடந்த வாரம் பாலக்கரை கீழப்புதூர் பகுதியில் இருக்கும் தனது தாத்தாவின் வீட்டிற்கு மகிழ் மித்ரன் வந்துள்ளான். அங்கு வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்த மகிழ் மித்ரன் தெரியாமல் எர்த் வயரை தொட்டுவிட மயங்கி விழுந்துள்ளான்.

இதையடுத்து சிறுவனை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு மருத்துவர்கள் சிறுவனை பரிசோதித்து விட்டு இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.