தமிழகத்தில் அனைத்து பள்ளிகளிலும் 10 முதல் 12 ஆம் வகுப்புகளுக்கு மட்டுமே பொதுத்தேர்வு என்பதால் மாநிலம் முழுவதும் பொது வினாத்தாள் முறை கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தும் விதமாக ஆறு முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பொது வினாத்தாளை அறிமுகம் செய்வதற்கு பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. அதன்படி வருகின்ற செப்டம்பர் மாதம் இரண்டாம் வாரத்தில் காலாண்டு தேர்வு தொடங்க உள்ள நிலையில் 6 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொது வினாத்தாள் அறிமுகமாக உள்ளது.

இது முதல் கட்டமாக சோதனை முயற்சியில் பன்னிரண்டு மாவட்டங்களில் நடத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் 1 முதல் 5ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு செப்டம்பர் 14ஆம் தேதியும், ஆறு முதல் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு செப்டம்பர் 18ஆம் தேதியும், 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு செப்டம்பர் 15ஆம் தேதியும் காலாண்டு தேர்வு நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.