இயக்குநரும், நடிகை ரோஜா கணவருமான ஆர்.கே.செல்வ மணிக்கு எதிராக ஜாமினில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பித்து சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2016ம் ஆண்டு பைனான்சியர் முகுந்த்சந்த் போத்ரா குறித்து அவதூறு கருத்துகளை தெரிவித்ததாக ஆர்.ஜே.செல்வமணி மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, நேரில் அவர் ஆஜராகாததால் நீதிமன்றம் பிடிவாரண்ட் உத்தரவை பிறப்பித்துள்ளது.