தொழில் மற்றும் அரசு பணிகளில்  சம வாய்ப்புகளுக்கான போட்டியில் ஒரு சிலர் பின்தங்கி வருகிறார்கள். இந்த நிலையில் தான் 12 ஆம் வகுப்புக்கு பிறகு மாணவர்கள் இடைநிற்றலை குறைக்கும் விதமாக நான் முதல்வன் திட்டம் தொடங்கப்பட்டது. பள்ளிகள் அளவில் வாழ்க்கை வழிகாட்டி ஆலோசகர்கள் அடங்கிய ஒரு குழு உருவாக்கப்பட்டது. இதன் மூலமாக பள்ளி படிப்பு முடித்த மாணவர்கள் தங்களுடைய விருப்பப்படி உயர் கல்வியை தேர்ந்தெடுக்கவும் விண்ணப்ப படிவங்களை நிரப்பவும் உரிய வழிகாட்டுதல் வழங்கப்படுகிறது.

இந்நிலையில் சென்னை, போரூரில் UPS எனும் அமெரிக்க நிறுவனத்தின் தொழில்நுட்ப மையத்தை இன்றூ முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்தியாவில் முதன்முறையாக UPS நிறுவனக் கிளை சென்னையில் திறக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் மு.க ஸ்டாலின், “நான் முதல்வன் திட்டத்தில் தேர்வான மாணவர்களுக்கு UPS நிறுவனத்தில் வேலைவாய்ப்பு பயிற்சி வழங்கப்படும். UPS நிறுவனத்தில் ‘நான் முதல்வன்’ திட்டத்தில் பயிற்சி பெற உள்ள மாணவர்களுக்கு நியமன ஆணை வழங்கப்படும். போரூரில் 400 பேருக்கு UPS நிறுவனம் வேலை வாய்ப்பு வழங்குகிறது” என தெரிவித்துள்ளார்.