தமிழகத்தில் தற்போது இரண்டு கோடிக்கும் அதிகமான ரேஷன் கார்டுகள் உள்ள நிலையில் சுமார் 35 ஆயிரத்து 233 க்கும் அதிகமான ரேஷன் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த ரேஷன் கடைகளுக்கு அரசு விடுமுறை மற்றும் வெள்ளிக்கிழமைகளில் மட்டும் விடுமுறை அளிக்கப்படுகிறது.

இந்த நிலையில் ரேஷன் கடைகள் ஜனவரி 12ஆம் தேதி நாளை வெள்ளிக்கிழமை இயங்கும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வருவதால் நாளை அனைத்து ரேஷன் கடைகளும் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.