தமிழகத்தில் வருகின்ற ஜனவரி 15ஆம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் மக்களுக்கு அரசு சார்பில் பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் ஜனவரி 15ஆம் தேதி பொங்கல் பண்டிகையும் ஜனவரி 16ஆம் தேதி மாட்டுப் பொங்கல் மற்றும் ஜனவரி 17 காணும் பொங்கல் கொண்டாடப்பட உள்ளது.

காணும் பொங்கல் அன்று தமிழகத்தில் உள்ள சுற்றுலா தலங்களில் மக்கள் தங்களுடைய குடும்பத்துடன் வந்து மகிழ்ச்சியாக இருப்பார்கள். இதனால் சென்னை மெரினா கடற்கரையில் ஒவ்வொரு வருடமும் காணும் பொங்கலை முன்னிட்டு ஆயிரக்கணக்கில் மக்கள் வருகை தருவார்கள். இதனால் இந்த வருடம் மக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்துவதற்கு தேவையான முன்னேற்பாடுகளை மாநகர காவல் துறை மேற்கொண்டுள்ளது.