வருமானத்திற்கு அதிகமாக 1.72 கோடி ரூபாய் சொத்து குவித்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் தமிழக முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து கடந்த ஜனவரி இரண்டாம் தேதி உச்சநீதிமன்றத்தில் அவர் மேல் முறையீடு செய்திருந்தார். இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட உச்ச நீதிமன்றம் நாளை இந்த வழக்கில் விசாரணையை தொடங்க உள்ளது.