தமிழக துணை மின் நிலையங்களில் இன்று அக்டோபர் 12-ம் தேதி மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் சில மின் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் காலை 9  முதல் மாலை 4 மணி வரை மின்தடை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மின்தடை ஏற்படும் பகுதிகள்:

தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை உடன்குடி, தைக்காவூர், சீர்காட்சி, பிச்சிவிளை, செட்டியாபத்து, ஞானியார்குடியிருப்பு, தாண்டவன்காடு, தண்டுபத்து, வெள்ளாளன்விளை, பரமன்குறிச்சி, கொட்டங்காடு, மாதவன்குறிச்சி, மெய்யூர், பிறைகுடியிருப்பு, கடாச்சபுரம், அன்பின்நகரம் ஆகிய பகுதிகளில் மின் தடை ஏற்படும் என மின்வாரியம் அறிவித்துள்ளது.

பெரம்பலூர் துணை மின் நிலையத்தில் அக்டோபர் 12ஆம் தேதி இன்று காலை 9. 45 மணி முதல் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள உள்ளதால் பெரம்பலூர் நகர் பகுதிகளான புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம், சங்குப்பேட்டை மதனகோபாலபுரம், துறைமங்கலம்மின் நகர், நான்கு ரோடு பாலக்கரை எளம்பலூர் சாலை, ஆத்தூர் சாலை, வடக்கு மாதவி சாலை, துறையூர் சாலை, அரணாரை, மாவட்ட அரசு மருத்துவமனை, ஆலம்பாடி ரோடு, அண்ணா நகர், கேகே நகர், அபிராமபுரம், வெங்கடேசபுரம், மற்றும் கிராமிய பகுதிகளான செங்குணம், போலீஸ் குடியிருப்பு, எளம்பலூர், சிட்கோ, இந்திரா நகர், சமத்துவபுரம் ஆகிய பகுதிகளில் பராமரிப்பு பணிகள் முடியும் வரை மின் வினியோகம் இருக்காது என பெரம்பலூர் துணைமின் நிலைய உதவி செயற் பொறியாளர் முத்தமிழ் செல்வன் தகவல் தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை அருகே உள்ள புனல்குளம் தொகுப்பு துணைமின் நிலையம் மற்றும் குளத்துார் நாயக்கர்பட்டி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கவுள்ளதால் புனல்குளம், தெத்துவாசல்பட்டி, மஞ்சப்பேட்டை, தச்சங்குறிச்சி, விராலிப்பட்டி, நத்தமாடிப்பட்டி, சோழகம்பட்டி, நொடியூர், சமுத்திரப்பட்டி, கொத்தம்பட்டி, அரியாணிப்பட்டி, காடவராயன்பட்டி, புதுநகர், முதுகுளம், குளத்துார் நாயக்கர்பட்டி, நடுப்பட்டி, சேவியர்குடிகாடு, ஆத்தங்கரைப்பட்டி, கீராத்துார், பருக்கைவிடுதி, குளத்துார், மூக்கப்புடையான்பள்ளம் ஆகிய பகுதிகளில் இன்று (12ம் தேதி) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் வினியோகம் இருக்காது. இத்தகவலை மின்வாரிய உதவி செயற்பொறியாளர் வில்சன் தெரிவித்துள்ளார்.

தாரமங்கலம்: தாரமங்கலம், எம். செட்டிப்பட்டி, காடம்பட்டி, துட்டம்பட்டி, சிக்கம்பட்டி, பாப்பம்பாடி, தொளசம்பட்டி, சின்னப்பம்பட்டி, அமரகுந்தி, சமுத்திரம், அத்திராம்பட்டி, பூக்கார வட்டம், பவளத்தானூர், கருக்குப்பட்டி, அத்திக்காட்டானூர், வெள்ளாளபுரம், பெரியாம்பட்டி, வெள்ளக்கல்பட்டி ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

கீழ்கவரப்பட்டு: கடலூர் மாவட்டம் கீழ்கவரப்பட்டு துணை மின் நிலையத்தில் இன்று பராமரிப்பு காரணமாக காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மேல்கவரப்பட்டு, கீழ்கவரப்பட்டு, கோழிப்பாக்கம், கொங்கராயனூர், ஏ. கே. பாளையம், எஸ். கே. பாளையம், சின்னபகண்டை, பெரியபகண்டை, குச்சிபாளையம், பாபுகுளம், மேல்குமாரமங்கலம், அண்ணாகிராமம், பக்கிரிபாளையம், எழுமேடு, ஆண்டிபாளையம், மேல்பட்டாம்பாக்கம் பகுதியில் மின்தடை நிறுத்தம் செய்யபடுகிறது.

நத்தப்பட்டு: கடலூர் மாவட்டம் நத்தப்பட்டு துணை மின் நிலையத்தில் இன்று பராமரிப்பு பணி காரணமாக காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை செம்மண்டலம், கோண்டூர், சாவடி, சின்னகங்கானங்குப்பம், பெரியகங்கணாங்குப்பம், உச்சிமேடு, நாணமேடு, நத்தப்பட்டு, குமராபுரம், வரக்கால்பட்டு, பில்லாலி, அழகியநத்தம், திருவந்திபுரம், அருங்குணம், நத்தம், திருமாணிக்குழி, சுந்தரவாண்டி, பெத்தாங்குப்பம், களையூர், இரண்டாயிரம்விளாகம், திருப்பணாம்பாக்கம், எம். பி. அகரம், நெல்லிக்குப்பம் பகுதியில் மின்தடை நிறுத்தம் செய்யபடுகிறது.

குறிஞ்சிப்பாடி: குறிஞ்சிப்பாடி துணை மின் நிலையத்தில் இன்று 12 ஆம் தேதி பராமரிப்பு பணி காரணமாக காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை குறிஞ்சிப்பாடி, வேலவிநாயகர்குப்பம், புதுக்குப்பம், கஞ்சமநாதன்பேட்டை, விருப்பாட்சி, சித்தாலிக்குப்பம் ஆகிய பகுதிகளில் மின்தடை நிறுத்தம் செய்யபடுகிறது. இந்த தகவலை குறிஞ்சிப்பாடி மின்வாரிய அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

தர்மபுரி கோட்டத்திற்குட் பட்ட இலக்கியம்பட்டி துணை மின் நிலையத்தில் இன்று (வியாழக்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை கலெக்டர் அலுவலகம், இலக்கியம்பட்டி, பாரதிபுரம், செந் தில்நகர், ஒட்டப்பட்டி, வெங்கட்டம்பட்டி, தேவரசம்பட்டி, வீட்டு வசதி வாரியம், உங்கரானஅள்ளி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

கடலூர் மாவட்டம் சித்தரசூர் துணை மின் நிலையத்தில் இன்று பராமரிப்பு பணி காரணமாக காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை அருங்குணம், வானமாதேவி, பாலூர், நடுவீரப்பட்டு, சித்தரசூர், சி. என். பாளையம், பத்திரக்கோட்டை, விலங்கல்பட்டு, ஆராய்ச்சிக்குப்பம், சாத்திப்பட்டு, சிலம்பிநாதன்பேட்டை, பி. என். பாளையம், மேல்பட்டாம்பாக்கம், வாழப்பட்டு, திருக்கண்டேஸ்வரம், முள்ளிகிராம்பட்டு, வான்பாக்கம், விஸ்வநாதபுரம், நெல்லிக்குப்பம் மேல்பாதி, திருவள்ளுவர் நகர், அம்பேத்கர் நகர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் மின்தடை நிறுத்தம் செய்யபடுகிறது.

சிட்டாம்பூண்டி துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணி காரணமாக இன்று செஞ்சி நகரம், நாட்டார்மங்கலம், சேர்விளாகம், களையூர், ஈச்சூர், மேல்களவாய், அவியூர், மேல் ஒலக்கூர், தொண்டூர், அகலுார், சேதுவராயநல்லுார், பென்னகர், கள்ளப்புளியூர், சத்தியமங்கலம், சோ. குப்பம், வீரமநல்லுார், தென்பாலை, செம்மேடு, ஆலம்பூண்டி, பெரியமூர், பின்னலுார், சிட்டாம்பூண்டி, தாண்டவசமுத்திரம், அப்பம்பட்டு, பள்ளியம்பட்டு, மீனம்பூர், கோணை, சோமசமுத்திரம், சேரானுார், துத்திப்பட்டு, பொனங்குப்பம், தச்சம்பட்டு, காரை, மொடையூர், திருவம்பட்டு, அணிலாடி, கீழ்மாம்பட்டு, கீழ்பாப்பாம்பாடி, சொரத்துார், ஜம்போதி, கல்லேரி, ஒதியத்துார், பாடிப்பள்ளம், நெல்லிமலை, கெங்கவரம், தேவதானம்பேட்டை, கணக்கன்குப்பம்.

பெரம்பலூர் மின் கோட்டம்,. பேரளி துணை மின் நிலையத்தில் இன்று அக்டோபர் 12ம் தேதி காலை 9. 30 மணி முதல் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள உள்ளதால் பேரளி, அசூர் சித்தளி பீல்வாடி ஒதியம் சிறுகுடல் அறுமடல் கீழப்புலியூர் K. புதூர் எஸ். குடிக்காடு வாலிகண்டபுரம் கல்பாடி கே. எறையூர்நெடுவாசல் கவுள் பாளையம் மருவத்தூர் குரும்பபாளையம் செங்குணம் ஆகிய பகுதிகளில் அக்டோபர் 12ஆம் தேதி மாலை 5. 30 மணி வரை மின் வினியோகம் இருக்காது என உதவி செயற் பொறியாளர் முத்தமிழ்செல்வன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாமக்கல் மாவட்டம் காளப்பநாய்க்கன்பட்டி துணை மின் நிலையத்தில் இன்று 12-ம் தேதி (வியாழக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் மின்சார விநியோகம் தடை செய்யப்படும். அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை காளப்பநாய்க்கன்பட்டி, பேளுக்குறிச்சி, திருமலைப்பட்டி, கொல்லிமலை, காரவள்ளி, ராமநாதபுரம்புதூர், பள்ளம்பாறை, உத்திரகிடிகாவல், துத்திக்குளம் ஆகிய பகுதிகளுக்கு மின் விநியோகம் இருக்காது.

பழனி துணை மின் நிலைய பராமரிப்புப் பணிகள் காரணமாக இன்று (12.10.2023) வியாழன் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பழனி துணை மின்நிலையத்தில் இருந்து மின்விநியோகம் பெறும் பகுதிகளான பழனி நகர், பாலசமுத்திரம், நெய்க்காரபட்டி, ஆயக்குடி மற்றும் சின்னக்கலையம்புத்தூர் ஆகிய பகுதிகளில் மின்விநியோகம் நிறுத்தப்படும் என மின்சார வாரிய செயற்பொறியாளர் அறிவித்துள்ளார்.