சென்னை சோழவரம் அருகே இரண்டு ரவுடிகள் என்கவுண்டரில் சுட்டு கொலை செய்யப்பட்டுள்ளனர். சோழவரம் அருகே பிரபல கூலிப்படை தலைவன் முத்து சரவணன் மற்றும் சதீஷ் ஆகிய இரண்டு பேரும் சுட்டு கொலை செய்யப்பட்டனர். கொலை வழக்கில் முத்து சரவணன் பிடிக்க முயன்ற போது காவலர்களை தாக்கியதால் என்கவுண்டரில் சுட்டு கொலை செய்தனர். அதிமுக பிரமுகர் கொலை வழக்கில் சென்னையில் தனிப்படை போலீசாரால் கைது செய்யப்பட்ட முத்து சரவணன் செங்கல்பட்டு அழைத்துச் சென்றபோது தப்பிக்க முயற்சி செய்துள்ளதாக காவலர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.