தமிழகத்தில் நான் முதல்வன் உயர்கல்வி வழிகாட்டி திட்டத்தின் கீழ் தமிழகத்தில் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் கடந்த கல்வியாண்டில் கல்லூரி களப்பயணம் சிறப்பாக நடத்தப்பட்டது. இதனை தொடர்ந்து நடப்பு கல்வி ஆண்டில் அரசு பள்ளிகளில் பயிலும் பிளஸ் டூ மாணவர்கள் பயன்பெறும் விதமாக கல்லூரி களப்பயணம் நிகழ்வை அக்டோபர் 25ஆம் தேதி முதல் அக்டோபர் 28ஆம் தேதிக்குள் நடத்துவதற்கு திட்டமிடப்பட்ட நிலையில் சில நிர்வாக காரணங்களால் இந்த பயணம் நவம்பர் 6 முதல் 9ஆம் தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

இதன் மூலம் ஒரு பள்ளிக்கு 35 மாணவர்கள் வீதம் தேர்வு செய்யப்பட்டு அருகில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளுக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள். அங்குள்ள அனைத்து வசதிகளையும் மாணவர்கள் பார்வையிடலாம். இது சார்ந்த உரிய முன்னேற்பாடுகளை அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.