தமிழகத்தில் அனைத்து அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் ஆறு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்த கணினி ஆய்வகம், இயற்பியல் மற்றும் வேதியியல் உள்ளிட்ட அறிவியல் ஆய்வகங்கள் செயல்பட்டு வருகின்றன. இதனை பராமரிக்க 4 ஆயிரத்திற்கும் அதிகமான ஆய்வக உதவியாளர்கள் பணியாற்றுகின்றனர். இவர்களை பள்ளியின் தலைமை ஆசிரியர்கள் ஆய்வக பணிகள் தவிர பிற பணிகளில் பயன்படுத்தக் கூடாது என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.