தமிழகத்தில் 1 முதல் 3ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பாடம் எடுக்கும் ஆசிரியர்களுக்கு நடத்தப்பட இருந்த குறுவள மைய பயிற்சி தேதி மாற்றப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், நவம்பர் 18ஆம் தேதிக்கு பதில் நவம்பர் 25ஆம் தேதிக்கு பயிற்சி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் அறிவியல் மற்றும் கணித கற்றலை மகிழ்ச்சியான கற்றலாக மாற்றுவதற்காக இந்த திட்டம் உருவாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.