திருச்செந்தூர் முருகன் கோவிலில் கந்த சஷ்டி விழா பூஜையுடன் இன்று தொடங்கும் நிலையில் கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்காரம் வருகின்ற நவம்பர் 18ஆம் தேதி நடைபெறுவதை முன்னிட்டு அங்கு பக்தர்கள் குவிந்து வருகிறார்கள். இதனால் அன்றைய தினம் தூத்துக்குடி மாவட்டத்தின் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. விழாவில் அரசியல் தலைவர்கள் கலந்து கொள்ள உள்ளதால் அங்கு போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.