செங்கல்பட்டு பணிமனையில் பராமரிப்பு பணி நடைபெறுவதால் சென்னை கடற்கரை மற்றும் செங்கல்பட்டு மின்சார ரயில் சேவை இன்று மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி சென்னை கடற்கரையிலிருந்து செங்கல்பட்டுக்கு தினமும் காலை 11.40 மணிக்கு மற்றும் பகல் 12.20 மணிக்கு புறப்படும் மின்சார ரயில்கள் நவம்பர் 13 இன்று சிங்கப்பெருமாள் கோவிலுடன் நிறுத்தப்படும் எனவும் மறுமார்க்கமாக செங்கல்பட்டில் இருந்து சென்னை கடற்கரைக்கு பிற்பகல் 1.45 மற்றும் பிற்பகல் 2.20 மணிக்கு புறப்படும் மின்சார ரயில்கள் இன்று சிங்கப்பெருமாள் கோவிலில் இருந்து புறப்பட்டு சென்னை கடற்கரை வந்தடையும் என சென்னை ரயில்வே கோட்டம் தெரிவித்துள்ளது.