தமிழகத்தில் நடப்பு ஆண்டுக்கான பொறியியல் கல்லூரிகளின் மாணவர் சேர்க்கை இணையவழி விண்ணப்ப பதிவு தற்போது நடந்து கொண்டிருக்கிறது. இதனைத் தொடர்ந்து பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் இரண்டாம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது மாணவர்களின் நலனை கருதி ஒரு மாதம் முன்னதாக அதாவது ஜூலை இரண்டாம் தேதி தொடங்கி செப்டம்பர் 3ஆம் தேதி வரை இணைய வழியில் கலந்தாய்வு நடைபெறும் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார்.

அதனைப் போலவே சிறப்பு பிரிவு கலந்தாய்வு ஜூலை இரண்டாம் தேதி முதல் ஐந்தாம் தேதி வரையும், பொதுப் பிரிவு கலந்தாய்வு ஜூலை 7 முதல் ஆகஸ்ட் 24ஆம் தேதி வரையும் நடத்தப்படும். இதனைத் தொடர்ந்து துணை கலந்தாய்வு ஆகஸ்ட் 28 முதல் 30-ம் தேதி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது