கோவையிலிருந்து சாய் நகர் சீரடிக்கு வருகின்ற மே 26 ஆம் தேதி முதல் பாரத் கௌரவம் ரயில் இயக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி கோவை வடக்கு ரயில் நிலையத்திலிருந்து மே 26 ஆம் தேதி இரவு 8 மணிக்கு புறப்படும் ரயில் மே 28ஆம் தேதி காலை 11.40 மணிக்கு சாய் நகர் சீரடிக்கு சென்றடையும். அதன் பிறகு அங்கிருந்து மே 29ஆம் தேதி பிற்பகல் 2.10 மணிக்கு புறப்படும் ரயில் மறுநாள் 7.15 மணிக்கு கோவை வந்தடையும்.

மேலும் இந்த ரயில் திருப்பூர், ஈரோடு, சேலம், மொரப்பூர், டோன்ட் வழியாக இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஒன்பது குளிர்சாதன பெட்டிகள் மற்றும் இரண்டு படுக்கை வசதி கொண்ட பெட்டிகள் உள்ளது. இந்த ரயிலில் பயணிக்க நபருக்கு 6000 முதல் 10 ஆயிரத்து 500 ரூபாய் வரை கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.