தமிழகத்தில் 11 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு டிசம்பர் 11ஆம் தேதி நடைபெற இருந்த அரையாண்டு தேர்வுகள் புயல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து இன்று முதல் அரையாண்டு தேர்வு மாணவர்களுக்கு தொடங்கிய நிலையில் அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் டிசம்பர் 22ஆம் தேதி வரை தேர்வுகள் நடைபெற உள்ளது.

இந்த நிலையில் பள்ளி மாணவர்களுக்கு தொடர்ந்து விடுமுறை அறிவிக்கப்பட்டதால் அரையாண்டு விடுமுறை குறைக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அனைத்து மாணவர்களுக்கும் டிசம்பர் 23 முதல் ஜனவரி 1ஆம் தேதி வரை அரையாண்டு விடுமுறை என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. இந்த விடுமுறை முடிவடைந்து அனைத்து பள்ளிகளும் ஜனவரி இரண்டாம் தேதி திறக்கப்படும்.